Indian Railways News => Topic started by Mafia on Mar 13, 2013 - 15:00:03 PM


Title - செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்
Posted by : Mafia on Mar 13, 2013 - 15:00:03 PM

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் 4-ம் ஆண்டு, 5-ம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் 6-வது நடைமேடையில் புறப்பட தயாராக நின்ற சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மாணவர்களின் திடீர் போராட்டத்தில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்களிடம் நிலைய மேலாளர் மணிவண்ணன், மற்றும் ரெயில்வே போலீசார் சமாதானம் பேசினர்.

இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இன்று காலை செங்கல்பட்டு ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.