Indian Railways News => Topic started by railenquiry on Feb 09, 2013 - 00:01:08 AM


Title - கோவையில் ரயில் மறியல் போராட்டம் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 32 பேர் கைது
Posted by : railenquiry on Feb 09, 2013 - 00:01:08 AM

சென்னை: இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உட்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்றனர். கோவை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற 18 பேரை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி , ரேஸ்கோர்ஸ் பகுதியில் உ ள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரி அலுவலகத்துக்குள் புகுந்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 14 பேரை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் கைது செய்தனர்.