Indian Railways News => Topic started by RailXpert on Jan 19, 2013 - 20:00:03 PM


Title - Koyambedu-ST.Thomas MOUNT Metro Rail Train Run in August
Posted by : RailXpert on Jan 19, 2013 - 20:00:03 PM

சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை உயர் மட்ட பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். இந்த பாதை அமைப்பு பணி வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிவடைய உள்ளது.

அதைத் தொடர்ந்து சிக்னல்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். அந்த பணி 5 மாதத்தில் முடிவடையும்.

மெட்ரோ ரெயிலில் 4 பெட்டிகள் இருக்கும். மெட்ரோ ரெயிலின் முன்புற பெட்டி பிரேசிலில் இருந்து வந்துவிட்டது. அதில் கூடுதலாக சில வசதிகளை செய்யும் பணி நடந்து வருகிறது. முதல் பெட்டியின் மூலம் வருகிற ஆகஸ்டு மாதம் சோதனை ஓட்டம் விடப்படும்.

மற்ற 3 பெட்டிகளும் ஆகஸ்டு மாதம் வர இருக்கிறது. 4 பெட்டிகளும் இணைக்கப்பட்டு முழு நீள மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2014 தொடக்கத்தில் கோயம்பேட்டுக்கும் பரங்கிமலைக்கும் இடையே மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கும். இந்த வழித்தடத்தில் தினமும் 10 முறை ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

கிண்டி ஆசர்கானாவில் ரெயில் நிலையம் அமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் பணியில் சிறு சிறு விபத்துகள் நடைபெற்றதால் தாமதம் ஏற்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மார்ச் மாதத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.