Indian Railways News => Topic started by nikhilndls on Dec 10, 2012 - 03:00:06 AM


Title - முத்துப்பேட்டையில் விரைவில் ரெயில்வே முன்பதிவு மையம்: ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. தகவல் || muthupettai r
Posted by : nikhilndls on Dec 10, 2012 - 03:00:06 AM

திருத்துறைப்பூண்டி,டிச.9-

திருத்துறைப்பூண்டியிலிருந்து காரைக்குடி செல்லும் மீட்டர்கேஜ் பாதையை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு மீட்டர் கேஜ் ரெயில்பாதை நிறுத்தப்பட்டு அகலரெயில் பாதை பணி நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையம் மூடப்பட்டது. பொதுமக்கள் மீண்டும் திருத்துறைப்பூண்டியில் முன்பதிவு மையம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து முன்பதிவு மையம் மீண்டும் திறக்கப்பட்டது.

நாகை எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் கணினி முன்பதிவு மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, அகல ரெயில்பாதை விரைந்து முடிக்கப்படும். முத்துப்பேட்டையிலும் முன்பதிவு மையம் விரைவில் திறக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தி.மு.க நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் என்.பி.பக்கிரிசாமி, எம்.எஸ்.கார்த்தி, தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் பால ஞானவேல், ஜி.வி.அன்பரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, வக்கீல் தர்மராஜன் வர்த்தக சங்க தலைவர் செந்தில்நாதன், செயலாளர் ஆதப்பன், ரோட்டரிசங்க திட்ட இயக்குனர் பத்மநாபன், ஆர்.எஸ்.ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.