Indian Railways News => Topic started by irmafia on Jan 13, 2013 - 20:00:20 PM


Title - பாம்பன் ரெயில் பாதை வரலாறு
Posted by : irmafia on Jan 13, 2013 - 20:00:20 PM

பல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில்  இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர்.

அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.

1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.

அப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கமீட்டர் ஆகும்.

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது.

60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும். தற்போது நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில் பால தூணில் கப்பல் மோதியதால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.