Indian Railways News => Topic started by irmafia on Nov 15, 2012 - 21:00:36 PM


Title - கோவை ரெயில் நிலையத்தில் 1 மற்றும் 2–வது பிளாட்பார சுரங்கப்பாதை பணிகளை ஜனவரி மாதத்தில் முடிக்க திட்டம
Posted by : irmafia on Nov 15, 2012 - 21:00:36 PM

கோவை

கோவை ரெயில் நிலையத்தில் சுரங்க நடைபாதை பணிகளை வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில் நிலைய மேலாளர் தெரிவித்தார்.

ரெயில் நிலையம்

கோவை மாநகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலையத்துக்கு தினமும் 50–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களை பயன்படுத்தி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

பயணிகள் ரெயில்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கோவை ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்தந்த பிளாட்பாரங்களுக்கு பயணிகள் எளிதாக செல்வதற்கு வசதியாக சுரங்க நடைபாதை வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க நடைபாதையை பயன்படுத்தி பயணிகள் தாங்கள் செல்லும் பிளாட்பாரங்களுக்கு சென்று தாங்கள் பயணம் செய்யும் ரெயில்களில் ஏறி பயணத்தை தொடர்கின்றனர்.

சுரங்கப்பாதை

கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வந்து செல்லும் பயணிகள் வசதிக்காக மற்றொரு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மேல் பகுதியை தோண்டாமல் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் ரூ.44 லட்சம் மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அந்த பணிகள் முடிந்ததும் சுரங்கப்பாதையில் இருந்து 1 மற்றும் 2–வது பிளாட்பாரத்துக்கு எளிதில் செல்வதற்கு வசதியாக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக பிளாட்பாரத்தின் ஒரு பகுதியில் சாதாரண படிக்கட்டும், மற்றொரு பகுதியில் நகரும் படிக்கட்டும் அமைக்கப்பட உள்ளன.

ஜனவரி மாதம்

கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு உள்ள மண் தோண்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரும்பு குழாய்களைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு அதில் இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக 1 மற்றும் 2–வது பிளாட்பாரங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரூ.44 லட்சம் மதிப்பில் ஜெர்மனி நாட்டு தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த பணிகளை வருகிற ஜனவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக நிலைய மேலாளர் வி.ராஜன் தெரிவித்தார்.